• +91 8344448944
ருத்திராட்ச்சம் வேண்டுவோர் கவனத்திற்கு...

ஐந்து முகம் ருத்திராட்சம் தேவைப்படுவோர் இங்கு தங்களது முழு முகவரியை பதிவிடவும். நாங்கள் ருத்திராட்சம் அனுப்புவதற்கு எந்தவித கடடணங்களையும் பெறுவதில்லை.இதை ஒரு சேவையாக செய்து வருகிறோம்.

நீங்கள் பதிவிட்ட வாரத்தில் வரும் சனிக்கிழமை அன்று தபால் மூலம் ருத்திராடசம் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.

நமச்சிவாய....

Booking To Get Rudraksha
 Others
ருத்ராட்சமும் அதன் தன்மைகளும் !!!!!!

ருத்ராட்சத்தை பற்றி பல பதிவுகள் படித்திருப்பீர்கள் , ருத்ராட்சத்தை பற்றி அறிந்திருப்பீர்கள். ருத்ராட்சம் என்றவுடன் இது ஆன்மீக பதிவு என்று நினைத்து விட வேண்டாம் ,சரி நாம் விடயத்துக்கு வருவோம்.

ருத்ராட்சம் சிவபக்தர்கள் அணிய கூடியது, சைவர்களின் அடையாள சின்னம், ஞானிகளும் யோகிகளும் அணிய கூடியது ,சுத்த பத்தமாக இருப்பவர்கள் மட்டும் தான் அணிய வேண்டும், இதை அணிந்தால் பல விதிகளை கையாள வேண்டும் , என்று பலவாக சொல்லி கேட்டிருப்பீர்கள் .சரி அது அத்தோடு இருக்கட்டும் .பதிவை படித்துவிட்டு நீங்கள் அணிந்து கொள்ளலாமா வேண்டாமா என்று நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.

இதன் இலை மினுமினுப்பான வெளிர் பச்சை நிறம், வெண்மை நிறப்பூக்கள், கருநீலப்பழம் ஆகிய அமைப்பை கொண்டிருக்கும். இவை ஏப்ரல்-மே மாதங்களில் பூ பூக்கும், ஜீன் மாதங்களில் காய்க்கும், ஆகஸ்ட்-அக்டோபரில் பழம் பழுக்கும் ருத்ராட்சம் மேற்சொன்னவாறு ஞானிகளும் யோகிகளும் அணிய கூடியது, சுத்த பத்தமாக இருப்பவர்கள் மட்டும் தான் அணியவேண்டும், என்று பரவலாக எண்ணபட்டதால் பலரும் அணியமலிருந்தனர் .ருத்ராட்சத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த போதும், எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது. குறிப்பாக, இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே ருத்ராட்சம் புகழ்பெற்றது. இவர்கள் உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து ருத்ராட்சம் குறித்து ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில் ருத்ராட்சத்திற்கு மூன்று பண்புகள் தன்மைகள் உள்ளதாக கண்டறிந்தனர் அவை

*சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic) *காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic) *அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive) ஆகியன ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய ருத்ராட்சத்தையோ அல்லது ஒரு தொகுதி முகங்கள் கொண்ட ருத்ராட்சர மணிகளையோ அணிவோருக்கு, ஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள் (Transformation in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன் ஆர்வம், மனத்திட்பம் ஆகிய மாற்றம் பெறுகின்றனர். மேலும் ருத்ராட்ச மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் ஆய்வில் தெரிவித்தனர்.மேலும் ருத்ராட்ச மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றது என்றும் தெரிவித்தனர்.அன்று முதல் வெளிநாட்டவர் முதல் உள்ளூர்வாசிகள் வரை அணிய தொடங்கினர் . ருத்ராட்ச மணிகளுக்கு ஆழ்ந்த கோடுகள் உண்டு அதனையே முகங்கள் என்று சொல்வர், ஒரு கோடு இருந்தால் ஒரு முகம் என்றும் ,ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம் என்றும் கூறுவர் .இந்த மணிகளுக்கு இயற்கையாகவே துவாரங்கள் உண்டு, ருத்ராட்ச மணிகள் மூன்று நிறங்களில் உண்டு .செம்மை நிறம், கறுப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம்(பொன் நிறம்) ஆகும்.ருத்ராட்ச மணிகளை கொண்டு சித்த மருந்துகளும் தயாரிக்க படுகின்றன.

ருத்ராட்சமணிகள் எத்தனை முகம் உள்ளதோ அதே போல் அந்த மணிகளுக்குள்ளும் அத்தனை அறைகள் இருக்கும், ஒவ்வொரு அறையிலும் ஒரு கொட்டை இருக்கும், உதாரணமாக 5முகம் ருத்ராட்சம் என்றால் அந்த 5 முக ருத்ராட்ச மணிக்குள் 5 அறைகளும் 5 கொட்டைகளும் இருக்கும் . ருத்ராட்ச மணிகள் ஒரு முகம் முதல் 21 முகம் வரை கிடைக்கும்

இப்போது சொல்லுங்கள் மருத்துவ குணம் கொண்ட இந்த ருத்ராட்ச மணிகளை அணியலாமா வேண்டாமா என்று , ருத்ராட்சம் அணியுங்கள் .நம்மிடம் இருக்கும் எதிர் மறை எண்ணங்கள் மறையட்டும்.